×

காதலர் தினத்தில் கணவரை பிரிந்த நடிகை

மும்பை: காதலர் தினமான நேற்று தனது கணவரும், தொழிலதிபருமான ரித்தேஷை பிரிவதாக நடிகை ராக்கி சாவந்த் தெரிவித்தார். இந்தி நடிகை ராக்கி சாவந்த், அடிக்கடி சர்ச்சை கருத்துகளை கூறியும், விதவிதமான கவர்ச்சி ஆடைகளை அணிந்தும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வந்தார். இவர், தொழிலதிபர் ரித்தேஷ் சிங்கை கடந்த 2019 ஆகஸ்டில் திருமணம் செய்தார். இந்நிலையில் ராக்கி சாவந்த் நேற்று வெளியிட்ட பதிவில், ‘அன்புள்ள நண்பர்கள், நலம் விரும்பிகளுக்கு வணக்கம். நானும், ரித்தேஷும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளோம். எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தீர்க்க முயற்சித்தோம். ஆனால் அது முடியவில்லை. காதலர் தினத்திற்கு முன்பே பிரிய வேண்டும் என்று முடிவு செய்தோம். ஆனால் அந்த முடிவை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. காதலர் தினத்தில் நாங்கள் பிரிவதை நினைத்து மிகவும் வருத்தம் அடைகிறேன். எனது மனம் உடைந்துள்ளது’ என்று தெரிவித்துள்ளார். காதலர் தினத்தன்று ராக்கி சாவந்த் – ரித்தேஷ் ஜோடி பிரிந்ததால், ரசிகர்கள் சோகமடைந்து பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்….

The post காதலர் தினத்தில் கணவரை பிரிந்த நடிகை appeared first on Dinakaran.

Tags : Valentine's Day ,Mumbai ,Rakhi Sawant ,Ritesh ,
× RELATED மும்பை விமான நிலையத்தில் ரூ9.75 கோடி போதைப்பொருள் பறிமுதல்